கொரோனா வைரஸால் உயிரிழந்த பின்னர் உறவினர்களால் உரிமை கோரப்படாத 19 பேரின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக ஆலோசனை கோரப்பட்டிருக்கிறது.
கொழும்பு மாநகரசபை இந்த ஆலோசனையைக் கோரியிருக்கிறது.
இந்த சடலங்களைத் தொடர்ந்தும் கொழும்பு சவச்சாலையில் நீண்டகாலமாக வைத்திருக்க முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த ஆலோசனை கோரப்பட்டிருக்கிறது.
இந்த உடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களின் ஜனாஸாக்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமது உறவுகளின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளாத அடிப்படையில் இந்த உடலங்கள் தொடர்ந்தும் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.