போதைப்பொருள் வரத்தர்களுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் 13 பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேநகபர்கள் இன்று (24) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினை விற்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் குறித்த பணியகத்தின் 13 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.