மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 50ஆயிரத்து 517பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில், நான்கு இலட்சத்து 62ஆயிரத்து 690பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24மணித்தியாலத்தில் மட்டும் அங்கு ஆறாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு, 819பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது ஒரு இலட்சத்து மூவாயிரத்து 325பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 585பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன், இதுவரை மூன்று இலட்சத்து எட்டாயிரத்து 848பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.